TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...
ஆறு பார்வையற்றோரும் ஒரு யானையும்
நீண்ட காலத்திற்கு முன் அசாம் பள்ளத்தாக்கின் பிரம்மபுத்திர நிக்கரையில் ஆறு பார்வையற்றோர் வாழ்ந்து வந்தனர். பார்வையிழந்த வராக இருந்தாலும் தற்பெருமை பேசும் மோசமானவர்களாக இருந்தனர் . நம்பமுடியாத அளவுக்குக் கற்பனைகளைக் பின்னிப் பினைத்துக் கதைகளைச் சொல்லிக் காலங் கழித்தனர். உப்பு சப்பு இல்லாத கதைகளாக இருந்தாலும் அவர்கள் சொல்லுக்கின்ற கற்பனை நயத்தில் மற்றவை மகிழச் செய்தனர் . ஒவ்வொருவரும் ஒருவரை மற்றவர் விஞ்சும் வண்ணம் கதை சொல்வதில் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
அந்தக் கடவுள் கிருஷ்ணனையே நேரில் சந்தித்து விட்டு வந்ததைப் போல் நம்புகிற வண்ணம் கதையைப் புனைந்து சொல்லும் திறமை பெற்றிருந்தான் ஒருவன் கடவுளிடம் உரையாடல் நடத்தியதைப்போல் தத்ரூபமாக எடுத்துக்கூறும் ஆற்றலைப் பெற்றுஇருந்தான் . மற்றவர்கள் அவனை நம்புவார்கள் என்றால் ஒன்றுமற்ற கதையை மற்றவர்கள் கேட்டு ஒன்றிவிடுகிறது . என்பது அவர்களது விதி என்றே சொல்ல வேண்டும். விக்கிரமாதித்தனின் புகழ்பெற்ற சாகசங்களை இரண்டாவது நபர் கதைகளாகப் புனைந்து சொல்லிக் கொண்டிருப்பான் ,மற்றவர்களை மகிழ்விப்பான்.
விக்கிரமாதித்தனின் கூடுவாட்டுக் கூடுபாயும் மாய வித்தையைப் பற்றி விலாவாரியாக விவரிப்பான்
கேள்வி கேட்கும் வேதாளம் பற்றி விறுவிறுப்பாகக் கூறுவான் மூன்றாம் நபரே ஒருநாள் முள்ளம் பன்றி ,வலிமையான புலியின்மீது விழுந்ததாகவும் அதனுடைய முட்கள் புலியை ஊடுருவியாதால் வலி பொறுக்கமுடியாமல் வாலைக் கால்களுக்கிடையே சுருக்கி வைத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறுவான் . இதைப் பார்த்த புல்புல் பறவை சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாகவும் நம்பும்படியாகக் கூறுவான் . அடக்கம் முடியாத சிரிப்பால் பறவையின் வாயிலிருந்து இரத்தம் வழிந்து மார்பை சிவப்பு நிறமாக மாறிவிட்டது என்ற அளவுக்குக் கதையைக் கூறி முடிப்பான்.
நான்காவது,ஐந்தாவது மற்றும் ஆறாவது நபர்கள் கற்பனையில் அனைவரையும் விஞ்சிவிடுவார்கள் உண்மையில் பார்த்திராத அளவுக்கு இவர்களது கதைகள் சாகசங்கள் நிறைந்தவையாக இருக்கும் . அவர்களது பொய்களை நம்புகிற அளவுக்கு கண், காது, மூக்கு வைத்து கதைச் சொல்வார்கள். இவர்கள் அப்படிப்பட்ட கதைகளைச் சொல்வத்திற்கு பழகிவிட்டார்கள். ஒருவர்
கதையை மற்றொருவர் மகிழ்ச்சியுடன் ரசிப்பார்கள் சாதாரண அறிவு படைத்தவன் கூட இத்தகைய அபத்தானகதையை கேட்க்கமாட்டான்.
. ஒருநாள் இந்த ஆறு நபர்களும் ஒருவர் சோதளை ஒருவர் பிடித்துக் கொண்டு பார்வையுள்ள நபரால் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர் . அவர்கள் ஒரு வெட்டவெளியை வந்தடைந்தனர் . அங்கே ஒரு யானை நின்று கொண்டிருந்தது. அது ஓய்வெடுத்துக் கொண்டு இப்படியும் அப்படியும் ஆடிக் கொண்டிருந்தது.அவர்களை அழைத்து வந்த வழிகாட்டி ஒரு பெரிய யானை இருப்பதாக கூறி நல்லவேளை சாந்தமான யானையாக இருக்கிறது .ஆபத்து ஒன்றுமில்லை என்று கூறினான் . ஆறு பேறும் பார்க்க முடியாத நிலையில் இருந்தாலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலில் அது எப்படி இருக்கிறது என்று தாங்களே தொட்டு உணரவேண்டும் என்று விரும்பினர் .
முதல் நபர் துணிச்சாலனவன் . அவன் துணிச்சல் உள்ளவனா அல்லது முரடுதுனிச்சாலா என்று கூற முடியவில்லை. இருந்தாலும் துடிப்பு மிக்கவனாக இருந்தான் . யானை உடலின் ஒரு பக்கத்தை அவன் உள்ளங்கையால் தொட்டப் பார்த்தபோது அவனது மூளையில் அது ஒரு சொரசொரப்பான சுவர் என்று பதிவானது அவன் ஒரு பக்கத்தைத் தான் தொட்டான் மற்ற உறுப்புகளைப் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது அவனுக்கு மற்றவர்களைவிட யானையைப்பற்றி நன்றாகத் தெரிந்துவிட்டது என்று சக தோழர்களிடம் கூறினான் . அது ஒரு வகையான முரடான சுவர் என்றான் . அதுதான் யானை என்று அடித்து கூறினான் யானையைப் பற்றி இதுவரை நமக்கிருந்த எண்ணசனங்கள் யாவும் அடிப்படை இல்ல்தாவை என்றான்.
இரண்டாவது நபர் கைகளை விர்த்துக் கொண்டு சென்றான் . அவன் நேராகச் சென்றுஇரண்டு தந்தங்களைத் தொட்டான். எட்டிப் போல இல்லாமல் மிகவும் வளைந்து இருந்ததாலும் அவை ஈட்டிகள் என்றே சொன்னான் மற்ற உறுப்புகளைத் தெர்ந்து கொள்ளாமல் தந்தங்களைத் தொட்ட பார்வையற்ற மனிதன் வேறு என்னதான் கூற முடியும் . ? யானையைப் பற்றிய அவர்களது சிந்தனை வேடிக்கையானது . ஆனால் அவனது தோழர்களிரிடம் அவன் உணர்ந்ததை அடித்துச் சொன்னான். மூன்றாவது நபர் முன்னே வந்தான் . அவன் யானைக்குப் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தான் யானையின் வாலைக் தொட்டான் . அதன் முனை வரைக்கும் தடவிப் பார்த்தான் . நாரின் முனையுடன் கூடிய கயிறுதான் யானை என்று வியந்து கூற்னான் . யானையைப் பற்றி மற்ற தோழர்கள் கூறிய கருத்துகளைக் கேலி செய்த்தான்.
நான்காவது நபர் யானையின் துப்பிகைக்கு முன்னால் இருந்தான் . அதை அடி முனை வரை தொட்டுப் பார்த்தான் .வாய் அடிப்பகுதியிலும் வால் மேல்பகுதியிலும் உள்ள பாம்புபோல அதை உணர்ந்தான் . யானை என்பது முரட்டுத்தோலும் படமும் கொண்ட பாம்பு தான் என்றும், மற்ற தோழர்களுக்கு இது தெரியவில்லை என்று நினைத்தான். தும்பிகையைத் தவிர மற்ற உறுப்புகளை அவன் தொட்டும் பார்க்கவில்லை . அவன் நினைத்ததும் போல உருவத்தைச் சொன்னதில் வியப்பொன்றுமில்லை.
அடுத்து வந்தவன் ஐந்தாவது நபர் . வயதில் மூத்தவனாக இருந்ததால் சற்று குனிந்து நடந்து வந்தான் . யானையின் முன்னங்கால்களை தொட்டுப் பார்த்தான் . அருமையாக இருக்கும் இரண்டும் தூண்களைப் போன்றது. யானை என்ற முடிவுக்கு வந்தான் . அவன் இதைச் சொன்னதும் மற்றவர்கள் சிர்த்துவிட்டனர் . அது ஓர் அற்புதமான சிந்தனை என்றனர் . ஒவ்வொருவரும் தான்தான்
அறிவாளி என்றும் அறுவரில் தானே சிறந்தவன் என்றும் நம்பினர். நல்ல உயரமும் வலிமையான உடலமைப்பும் கொண்ட ஆறாவது நபர் வந்தான். இதுவரைத் தனது கையால் யானையின் ஒரு காதலைத் தொட்டான் . யானையை கடைசியாக நான் கண்டு பிடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூவினான் . அது ஒரு பெரிய விசிறி என்றும் அது எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்றும் என்று கூறினான். யானை தலையை ஆட்டிக் கொண்டும் காதை விச்றிக் கொண்டும் காலை உதைத்து கொண்டும் இருக்கும் என்பது வாசகர்களுக்குத் தெரியும் .
ஆறாவது நபர் யானையை ஒரு பெரிய விசிறி என்றும் அது எப்போதும் வீசிக் கொண்டே இருக்கும் என்றும் கூறுவதற்குப் போதிய காரணம் இருந்தது . மற்றவர்கள் எல்லாம் அவரவர் கற்பனைக்கு ஏற்ப கருத்துகளைக் கூறினார் . அவர்களது கருத்துக் களில் பிடிவாதமாகவும் இருந்தனர் . ஆறாவது நபரைப் பார்த்து போதிய நுண்ணறிவு இல்லாதவன் என்றும் கூறினர் . ஆனால் அவர்கள் அனைவருமே அவரை வேக்காடு கருத்துகளைக் கொண்டவர்கள் என்பதை உணரவில்லை . அனைவருமே சிறிதளவு சரியாகச் சொன்னார்கள் . ஆனால் யாருமே சரியாகச் சொன்னார்கள் . ஆனால் யாருமே சரியான கருத்தைச் சொல்ல வில்லை . யானையின் ஓர் உறுப்பையே முழு யானை என அனைவருமே தவறாகப் புரிந்துகொண்டனர் . அவர்களுக்குப் பார்வை இருந்திருந்தால் அவர்கள் யானையைப் பார்த்திருக்க முடியும் . எப்படிப்பட்ட உருவம் படைத்தது என்பதையும் உணர்ந்திருக்க முடியும்.
எந்த ஒரு கருத்தானலும் முழுமையற்ற அல்லது அரைகுறை ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் முடிவுகள் தப்பாகத்தான் இருக்கும் . சரியான முடிவுகள் எடுப்பதற்கு அந்தத் பொருளின் அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்து தெளிவாகக் கூறவேண்டும் . ஓர் அம்சத்தை மட்டும் வைத்து எடை போடுதல் தவறுக்கும் அவசர முடிவுக்கும் வழிவகுக்கும்.
Comments
Post a Comment